பிரதமர் மன்மோகன் சிங்குடன் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் சந்தித்து இலங்கை தமிழர் நிலை குறித்து நேற்று அறிக்கை அளித்தனர்.

அவ்வறிக்கையை அளிக்க சென்ற குழுவில் விடுதலைச்சிறுத்தகைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.

ஆனால் தமிழ்விண் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டதாக செய்திவெயிட்டுள்ளது.

தமிழ்விண் செய்தி

இலங்கை தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பப் பட்ட நிவாரணப் பொருட்கள், ஐந்து மாத அலைக்கழிப்புக்கு பின், நாளை (21ம் தேதி) இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அடுத்த இரு நாட்களுக்குள், முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக, ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பில், திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய, "கேப்டன் அலி' என்ற கப்பல் மே 7ம் தேதி இலங்கைக்கு புறப்பட்டது. "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் என இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டது. சர்வதேச விதி மீறப்பட்டுள்ளதாக கூறி, நிவாரணப் பொருள் அடங்கிய கப்பலை ஏற்க, இலங் கை மறுத்தது. மூன்று நாட்கள் நடுக்கடலில் "வணங்காமண்' கப்பல் தத்தளித்தது. இதன் பின், சென்னையைச் சேர்ந்த "மனிதம்' என்ற அமைப்பு, நிவாரணப் பொருட்களை சென் னை துறைமுகத்தில் இறக்க அனுமதி கோரியது; அதுவும் மறுக்கப் பட்டது.

இந்தியா வந்த இலங்கை உயர்மட்டக் குழுவினர், நிவாரணப் பொருட்களை ஏற்பதாக, உறுதியளித்ததன் அடிப்படையில், "வணங்காமண்' கப்பல் சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டு, "கேப் கலோராடா' என்ற கப்பலில் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் இந்த பொருட்கள் இறக்கி வைக்கப் பட்டன. நிவாரணப் பொருள்களுக்கு வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி, இவற்றை வினியோகிப்பதற்கு இலங்கை அரசு தாமதம் செய்தது. நிவாரணப் பொருட்களை எடுக்க, செஞ்சிலுவைச் சங்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளுக் கும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள், இலங்கைத் தமிழர்களுக்காக வழங்கிய மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 884 டன் நிவாரணப் பொருள்கள், எடுப்பதற்கு ஆள் இல்லாமல் கொழும்பு துறைமுகத்தில் அனாதையாக கிடந்து வந்தது.

இது குறித்து "மனிதம்' அமைப்பின் நிர்வாகி அக்னி சுப்பிரமணி கூறியதாவது: நிவாரணப் பொருட்களுக்கு எந்த நாடும் வரி விதித்ததில்லை. இலங்கை அரசு மட்டும் வரி விதித்ததோடு, பல்வேறு காரணங்களைக் காட்டி ஐந்து மாதம் காலம் கடத்தியுள்ளது. இப்போது கூட வரியை தள்ளுபடி செய்யாமல், தான் செலுத்துவதாக கூறி கணக்கு காட்டியுள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு இலங்கை அரசு பணம் கட்டி எடுத்தது என்ற பேரைப் பெறுவதற்காக, இலங்கை அரசு நாடகம் நடத்தியுள்ளது. ஐந்து மாதங்கள் அலைகழிக்கப்பட்ட நிலையில், அந்த நிவாரணப் பொருட்கள் எந்த நிலையில் இருக்கும் என்று தெரியவில்லை. அவை பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதை சோதனை செய்த பின், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் வினியோகிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் மூலமாக கூடுதல் நோய்களுக்கு முகாம்களில் வாடும் தமிழர்கள் ஆளாக நேரிடும். இவ்வாறு அக்னி சுப்பிரமணி தெரிவித்தார்.


சென்னை கவர்னர் மாளிகையில், இந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, கவர்னர் பர்னாலாவை நேற்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்கு பின் அவர் கூறுகையில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மேம்பட வேண்டும் என்ற நோக்கோடு, கவர்னர் பர்னாலாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.

உறவுகள் மேம்பட தொடர்ந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என்றார். தமிழக மீனவர்கள் மீண்டும் தாக்கப்பட்டது குறித்து கேட்டபோது, இது தொடர்பாக இலங்கை அரசிற்கு தகவல் தெரிவித்துள்ளேன் என்றார்.

இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்.பி குழுக்களில் ஒருவரான விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் 19.10.2009 அன்று வெளியிட்ட அறிக்கை.


மிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழு முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் ஈழத் தமிழர்களின் வாழ்நிலைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்தது. யாழ்ப்பாணம், வவுனியாவில் உள்ள வதை முகாம்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை இக்குழு நேரில் சந்தித்தது. அத்துடன் தமிழினத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தது. மலையகப் பகுதிகளுக்கும் சென்று இந்திய வம்சாவளித் தமிழர்களின் நிலைமைகளையும் இக்குழு ஆராய்ந்தது. நிறைவாக, சிங்கள ஆட்சியாளர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து அவர்தம் கருத்துக்களையும் அறிந்தது. 14Š-10Š-2009 அன்று மாலை சென்னை திரும்பிய இக்குழு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடத்தில் தமது ஆய்வறிக்கையை அளித்தது. தமிழக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் முன்கூட்டியே பரப்பிவிட்ட அவதூறுகளுக்கு மாறாக, அந்த அறிக்கை ஈழத் தமிழர்களின் அவலங்களை உள்ளது உள்ளபடியே உண்மைகளை வெளிப்படுத்தியது. இக்குழு மேற்கொண்ட பயணத்தின் விளைவாக சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் இறுக்கம் நிறைந்த மமதைப் போக்கில் சிறிய அசைவும் தளர்வும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் ஊடகங்களையோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களையோ சர்வதேச அளவிலான மனிதஉரிமை ஆர்வலர்களையோ அப்பகுதிக்குள் அனுமதிக்காமல் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இரும்புத் திரையிட்டு சிங்கள ஆட்சியாளர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை முதன்முறையாக இக்குழு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. வதைமுகாம்களில் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஈழத் தேசமே இராணுவத்தின் கெடுபிடிக்குள் சிக்கிச் சிதைந்து வருகிறது. மக்களிடையே மன அழுத்தங்களும் அச்சமும் பீதியும் மேலோங்கி நிற்கின்றன. அகில உலகத்தையே வியக்க வைத்த Š அதிர வைத்த வீரஞ்செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த எம் தமிழ் மக்களிடையே அச்சத்தாலான அடிமைத்தனமும் பரவுவதை அவர்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காகக் கையேந்தி நிற்கும் நிலைமைகளிலிருந்து அறிய முடிகிறது.

ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு தமது உறவினர்களைச் சந்திக்கக்கூடப் போக முடியாதபடி முள்வேலிக் கம்பித் தடுப்புகளும் இராணுவத்தின் கெடுபிடிகளும் வாய் திறக்க முடியாத வகையில் அவர்களை வாட்டி வதைக்கிறது. மெலிந்த நலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. நாவிலிருந்து வார்த்தைகள் வராமல் விழிகளிலிருந்து தாரைதாரையாய் நீர் கொட்டுவதைக் காண முடிகிறது. இரு கைகளையும் கூப்பிக் குனிந்து கும்பிடு போட்டு, ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா!'' என்று கண்ணீரைக் கொட்டியபடி சிலர் கதறி அழுதனர். இரண்டு பேர் மட்டுமே படுத்து எழக்கூடிய கூடாரங்களில் எட்டுப் பேர், பத்துப் பேர்களை அடைத்து வைத்திருக்கும் மனிதநேயமற்ற கொடுமைகள் திணிக்கப்பட்டுள்ளன. தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டைச் சொற்களால் விவரிக்க முடியாது. இந்த மனித அவலங்களை மனிதநேயமுள்ள எவராலும் சகித்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இந்தக் கொடுமைகளை எப்படி வேடிக்கை பார்க்கின்றன என்பதுதான் புரிந்துகொள்ள முடியாத பெரும் கொடுமையாக உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய இக்குழு ஈழத்தில் நடக்கும் சிங்கள இராணுவ ஆட்சியின் அரச வன்கொடுமைகளை உலகரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு சிங்கள அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மேலும் ரூ. 500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வதைமுகாமில் சிக்கி அவதிப்படுவோரை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்பதும், அவர்தம் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு உதவ வேண்டுமென்பதும் இன்றியமையாத ஒன்று என்றாலும், தவிர்க்க முடியாத உடனடித் தேவைகள்தான் என்றாலும், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அத்தகைய இனவெறியாளர்களை தண்டிக்க வேண்டியது மிக மிக இன்றியமையாத ஒன்றாகும்.

அந்த வகையில் நெஞ்சிலே ஈரமில்லாத ஈவிரக்கமேயில்லாத சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, இராஜபக்சே சகோதரர்களை சர்வதேசப் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனவும் சிங்கள அரசுக்கு அனைத்துலக அளவில் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமெனவும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 22-10--2009 அன்று சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தத் தமிழர்களும் மனிதநேய ஆர்வலர்களும் மேற்சொன்ன இரு கோரிக்கைகளை மையப்படுத்தி சர்வதேசச் சமூகத்தை தொடர்ந்து வற்புறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல் .திருமாவளவன்
.

தமிழ் மக்களிடம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்று பல காலமாக இயங்கிவந்த புதினம் , தமிழ்நாதம் இணையத்தளங்கள் இன்று முதல் முடக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் செய்திகளை பிரசுரிக்கும் ஒரு முக்கிய இணையமாக விளங்கியது புதினம். இவ்வாறு காரணம் எதுவும் சொல்லாமல் தனது சேவைகளை அது முடக்கியதற்கான சரியான காரணத்தை என்ன என்பது தெரியவில்லை.

புதினம் இணையத்தளம், அதன் உரிமையாளர்களால் முடக்கப்பட்டதா இல்லை, அதன் வலையத்தளத்தில் எவரேனும் ஊடுருவி இவ்வாறு செய்திருக்கிறார்களா என இதுவரை சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

லங்கை அகதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு குழுவினர் சென்ற கப்பல் ஒன்றை கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து கைப்பற்றியுள்ளார்கள். கப்பலில் உள்ள அகதிகள் எங்கிருந்து புறப்பட்டார்கள் என்று உடனடியாக தெரியவில்லை.

கனடாவின் கடற்படை பிரிவினரதும் இரண்டு பொலிஸாரினதும் பாதுகாப்புடன் கப்பல் தற்போது அகதிகளோடு விக்ரோறியாவிலுள்ள ஒரு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 76 பேருடன் வந்த "ஓசன் லேடி' என்ற பெயர் பொறிக்கப்பட்ட இக் கப்பல் சனிக்கிழமை காலை கனடிய கடல் பிரதேசத்திற்குள் பிரவேசித்தது என்று கனடிய பொது பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் வேன் லோன் தெரிவித்தார்.

எங்கிருந்து இக்கப்பல் வந்தது என்று கேட்ட போது ஆரம்பத்தில் இலங்கையிலிருந்து வந்ததாக கருதப்பட்டது. ஆனால் இன்னமும் அது ஊர்ஜிதம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

கனடிய பொலிஸார் பிடித்த படங்களில் கப்பலில் இருந்தவர்கள் மேலே பறந்து சென்ற ஹெலிகொப்டர் ஒன்றை பார்த்து கைகளை அசைத்ததை காணக் கூடியதாக இருந்தது என்றும் சிவில் உடைகளுடன் காணப்பட்ட அவர்களில் சிலர் சேர்ட் அணியாமல் நின்றார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.


கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டம்மான் ஆகியோரின் மரணச் சான்றிதழ்களை வழங்குமாறும் மீண்டும் இந்திய அரசாங்கம், இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பான விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வர இந்தியா பிரபாகரன் மற்றும் பொட்டம்மானின் மரணச் சான்றிதழ்களை ஏற்கனவே கோரியிருந்தது. இந்த மரணச்சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படாததால், இந்திய மீண்டும் அவற்றை கோரியுள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலையின் முக்கிய குற்றவாளிகளாக பிரபாகரன் மற்றும் பொட்;டம்மான் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசின் வதைமுகாம்களுக்குள் வாழும் உறவுகளை விடுதலைசெய்யக்கோரி மாபெரும் பேரணி சனிக்கிழமையன்று (17.10.2009) நடைபெறவுள்ளது.

உலக நாடுகளிடம் கையேந்தி பெரும் அழிவாயுதங்கள்கொண்டு தமிழினத்தின் பல்லாயிரம் உயிர்களை பலியெடுத்து இரத்தக்கறைகளில் தோய்ந்தபடி சிங்களப்பேரினவாதம் தொடர்ச்சியான மனிதவுரிமை மீறல்களை செய்து வருகிறது.

பட்டிணி ஓலங்களும், சாவுகளும் மலிந்துபோய், குரல்வளை நெரிக்கப்பட்ட மனிதர்களாய், அடக்குமுறையின் உச்சமாய் பெரும் துன்பத்துக்குள் வாழும் மக்களை விடுதலைசெய்யக்கோரி பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினரால் சுதந்திர தாகம் பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்தப்பேரணியை எழுச்சியாக்கி எமது மக்களின் வாழ்விற்கு உதவிட பிரான்சில்வாழும் அனைத்து உறவுகளையும் தவறாது இந்தப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களே உங்களது மக்களை காப்பற்றப் புறப்படப் போகின்றீர்களா? அல்லது சுகபோக வாழ்க்கையில் தீபாவளியை கொண்டாடப் போகின்றீர்களா? சிந்தியுங்கள்.

இடம்; - Port-Royal (RER-B) இல் இருந்து
Place Valhubert வரை

காலம் - 17.10.2009 சனிக்கிழமை
நேரம் - 14.00மணி

தமது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனும் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வாறன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதனை செயலாளர் நாயகமும், தாமும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்த பொறிமுறைமையை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடத்திய தேசிய மட்ட விசாரணைகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகள் நடத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் மற்றும் தண்டனை வழங்குதல் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் இலங்கைக்கு விஜயம் செய்வதனை அந்நாட்டு அரசாங்கம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்வீர்களா? என ஊடகவியலளார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முகாம்களில் நடமாடும் சுதந்திரம் ‐ ஏனைய விடயங்களைப் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன ‐ ராதிகா குமாரசுவாமி

சிறுவர்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி இலங்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களது நிலைமை உட்பட பல விடயங்கள் குறித்து அவதானிப்பதற்காக இராணுவ மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட் என்பவரை தமது பிரதிநிதியாக அடுத்த மாதம் அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கை முடிவடைந்த பின்னர் நாட்டின் வட பகுதியில் இன்னமும் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்த சிறுவர்களின் கதி குறித்து விசேட பிரதிநிதி குமாரசுவாமி கடந்த மாதம் குரல் எழுப்பியிருந்தார்.
இதற்கிடையில் மேஜர் ஜெனரல் பற்றிக் கெம்மேட்டை நவம்பர் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அனுப்பப் போவதாக இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கைப் பிரதம மந்திரியை ராதிகா குமாரசுவாமி சந்தித்து பேசியது பற்றி இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் கேட்ட போது, தாம் நட்புறவு ரீதியிலேயே இலங்கைப் பிரதமரை சந்தித்ததாகக் கூறினார்.
ஆனால், இலங்கை வெளிவிவகார அமைச்சரையும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் தாம் உத்தியோகபூர்வமாக சந்தித்ததாகவும் ராதிகா குமாரசுவாமி தெரிவித்தார்.

அவர்களுடன் தாம் பேசிய விடயங்களில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகள் பேணப்படுவது பற்றியும் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.
வன்னி மெனிக் பாம் முகாமிலும் ஏனைய முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த சிறுவர்களின் நிலைமை ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு அவர் சமர்ப்பித்த அலுவலக அறிக்கையில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் உரிமைகளும் உத்தரவாதங்களும் என்ற இணைப்பு 1க்கு அமைவானது என்று கருதுகிறீர்களா என இன்னர் சிற்றி பிறெஸ் அவரிடம் வினவியது.

அதற்குப் பதிலளித்த ராதிகா குமாரசுவாமி, முகாம்களில் நடமாடும் சுதந்திரத்தையும் ஏனைய விடயங்களையும் பொறுத்த மட்டில் ஐக்கிய நாடுகளின் கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளன என்று கூறினார். இது சம்பந்தமான இலங்கையின் பிரதிபலிப்பு மிகக் கடூரமானது என்றும் அவர் கூறியதாக இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவித்துள்ளது.

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை மூடி விடுமாறும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை பார்வையிட ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு வாய்ப்பளிக்குமாறும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்ட் விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இலங்கையின் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தை உடனடியாக விலகிக் கொள்ளப்பட வேண்டும் என மிலிபேண்ட் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுப்பது இலங்கை அரசாங்கமே அன்றி பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அல்ல.

அவருக்கு அவ்வாறான கோரிக்கைகளை விடுக்க உரிமையில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். டேவிட் மிலிபேண்ட் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கை விடுத்திருந்தார்.

வன்னி தடுப்பு முகாம்களில் வாழும் தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட திருப்தி தெரிவிக்கவில்லை. வவுனியா முகாம்களுக்கு நாம் மேற்கொண்ட பயணம் மிகவும் வேதனையையும், கடினமான வலியையுமே எமக்கு ஏற்படுத்தியது அந்த மக்களின் நிலையைப் பார்த்து நான் பல தடவைகள் கண்கலங்கிவிட்டேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐந்துநாள் பயணமாக இலங்கை வந்து வவுனியா முகாம்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து உரையாடிய திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவளவன் தமிழகம் திரும்ப முன்னர் கொழும்பிலிருந்து வெளியாகும் நாளேடு ஒன்றுக்களித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் திருமாவளவன் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

"வவுனியா தடுப்புமுகாம்களை பார்வையிட்டது மிகவும் வேதனையானதாகவும், கடினமான வலியைத் தருவதாகவும் அமைந்திருந்தது. மக்களை ஏன் இந்தளவுக்குப் போட்டு வதைக்கின்றார்கள் என்ற கேள்வி நமக்குள் எழுந்தது. அங்குள்ள மக்கள் கூட அந்தக் கேள்வியைத்தான் எழுப்பினார்கள். நாம் என்ன பாவம் செய்தோம்? ஏன் எங்களைப் போட்டு வதைக்கின்றார்கள்? இதற்குப் பதிலாக விஷம் கொடுத்து ஒட்டுமொத்தமாகக் கொலை செய்துவிடலாமே என பெணகள் தலையிலடித்துக்கொண்டு அழுதவாறு சொன்னார்கள். மூன்று நான்கு சந்தர்ப்பங்களில் நானே கண்கலங்கிப் போனேன்.

பெரும்பாலான இளைஞர்கள் பேசுவதற்கே அஞ்சினார்கள். எங்களுடன் பேசினால் பின்னர் அடையாளம் கண்டு ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். எங்களை வெளியில் அனுப்பி சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்ப ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். இப்போதுதான் புலிகள் இல்லையே, பிறகு எதற்காக எங்களைப் பிடித்து வைத்திருக்கின்றார்கள்? என்றெல்லாம் அங்குள்ள மக்கள் கதறினார்கள்.

அத்துடன் பெரும்பாலான மக்கள் குளிக்க, குடிக்க போதிய தண்ணீர் இல்லை என்றும் தண்ணீர் பிடிப்பதற்காக ஒரு வார காலம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் வருத்தத்துடன் சொன்னார்கள். இது மிகவும் உச்சமான குறையாக அங்கு வெளிப்ப்பட்டது. அதேவேளையில் எங்களை எங்களுடைய சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்புங்கள், அது போதும். அரசாங்கம் எமக்கு எதையுமே செய்ய வேண்டாம். நாங்கள் உழைத்துப் பிழைத்துக்கொள்கின்றோம் என்பதையே அங்குள்ள மக்கள் ஒட்டு மொத்தமாக ஒருமித்த குரலில் தெரிவித்தார்கள்.

முகாம் நிலைமைகள் திருப்திகரமாக இருக்கின்றது என இந்தக் குழுவில் எவரும் தெரிவிக்கவில்லை. எந்த அடிப்படையில் இவ்வாறான ஒரு தகவல் வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை. பயண ஏற்பாடுகள் குறித்து நன்றியை மட்டுமே சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்தோம்.

முகாம்களில் மக்கள் கடுமையாக வதைபடுகின்றார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே அனைவரினதும் ஒருமித்த குரலாக அமைந்திருந்தது. அங்கு போதிய குடிநீர் இல்லை. மருத்துவ மற்றும் சுகாதார வசதிகள் இல்லை என்பதை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் அழுத்தமாகக் குறிப்பிட்டோம். இதுதான் நடந்தது.

இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கின்றோம். அதன் அடிப்படையில் முதல்வர் ஆவன செய்வார் என நம்புகின்றோம்.

எங்களுடைய கருத்துக்களை சிறிலங்கா ஆட்சியாளர்களுக்குக் கூறியிருந்தோம். அவர்கள் அதனைக் கேட்டுக்கொண்டனர். உங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலிக்கின்றோம் என அவர்கள் தெரிவித்திவித்திருந்தார்கள். அரசாங்கத் தரப்பினருடனான பேச்சுக்களின் போது முகாம்களிலுள்ள மக்களை மீள்குடியேற்ற வேண்டும். குறிப்பாக பருவப் பெயர்ச்சிக்கு முன்னதாதக இவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதையே நாம் ஒட்டுமொத்தமான கோரிக்கையாக முன்வைத்தோம்.

இருந்தபோதிலும் கண்ணி வெடிகளை அகற்றிய பின்னரே மீள்குடியேற்றம் செய்ய முடியும் என்பதே அரசாங்கத்தின் பதிலாக அமைந்திருந்தது. அதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள்" என திருமாவளவன் மேலும் தெரிவித்தார்.

நன்றி : புதினம்

இலங்கை சென்ற தமிழக எம்பிக்கள் குழு சென்னை திரும்பியது. முதலமைச்சர் கருணாநிதி சென்னை விமானநிலையத்தில் அவர்களை வரவேற்றார்.


இலங்கை சென்று திரும்பிய தமிழக எம்பிக்களூடன் கலந்தாய்வு செய்த பிறகு முதல்வர் கருணாநிதி, ‘’இலங்கையில் தமிழர்கள் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள். முதற்கட்டமாக 58ஆயிரம் பேர் 15 நாட்களில் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்படுவார்கள்’’என்று தெரிவித்தார்.

இலங்கை முகாம்களில் தமிழர்களின் நிலை என்ன என்பதை நேரில் கண்டறியவதற்காக திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் 10 எம்.பி.க்களை கொண்ட குழு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றது.

முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களை தமிழக குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இதனையடுத்து கடந்த 11ந் தேதி யாழ்ப்பாணம் சென்று அங்கு வசிக்கும் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அன்று மாலை வவுனியாவில் உள்ள மாணிக்பார்ம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். 5 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது.

பின்னர் எம்.பி.க்கள் தனித்தனியாக சென்று தமிழ் அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இதை அடுத்து திங்கட்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பின் பேரில் நுவரலியா மலையக பகுதிகளுக்கு சென்று அங்கு வசிக்கும் தமிழக வம்சாவளி தொழிலாளர்களை கண்டு பேசினார்கள். அங்கிருந்து ஹட்டனுக்கு தமிழக எம்.பி.க்கள் குழு சென்றபோது ஏராளமான மக்கள் திரண்டு அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர்.

திங்கட்கிழமை இலங்கை அதிபர் ராஜபக்சேயை தமிழக குழுவினர் சந்திப்பதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அவர்கள் ராஜபக்சேயை சந்தித்து பேசினார்கள்.

முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினார்கள்.

அவர்களது கோரிக்கைகளை கேட்ட ராஜபக்சே, தமிழர்கள் வசித்த பகுதிகளில் விடுதலைப்புலிகள் வைத்துள்ள கண்ணி வெடிகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் அப்பகுதிகளில் மறு குடியமர்த்தம் செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

தமிழக எம்.பி.க்கள் இலங்கைக்கு வந்து முகாம்களின் நிலையை கண்டறிந்ததை ராஜபக்சே பாராட்டினார். இந்த சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமானும் உடனிருந்தார்.

பின்னர் எம்.பி.க்கள் குழு இலங்கை பிரதமரை சந்தித்து பேசியது. இன்று தமிழக எம்.பி.க்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமா ஆகியோரை சந்தித்து, முகாம்களில் தாங்கள் கண்டறிந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

கடந்த 4 நாட்களாக இலங்கையின் பல்வேறு முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்திய தமிழக எம்.பி.க்கள் குழுவினர், தங்கள் 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினர்.

இவர்களை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற முதல்வர் கருணாநிதி, இலங்கையில் நாளை முதல் சொந்த இடங்களில் குடியேறுவார்கள் என்று தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஏற்ப ஓரளவு நெருக்கமாக அமைந்துள்ளன. அங்கு பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அங்கு வாழ்கின்றவர்கள் தங்களை உடனடியாக மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்களே தவிர, வேறெதனையும் கேட்கவில்லை என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள் குழுவில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இலங்கையில் உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான தமிழர்கள், பல்வேறு துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவிப்பதாக பல்வேறு தகவல்கள் தமிழகத்தில் பரப்பப்பட்டன. அந்த தகவல்கள் உண்மையானவையா? என்பதனை நேரடியாக கண்டறிவதற்கே வருகைதந்தோம் என்றும் அவர் சொன்னார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்களை அவர்கள் மலையகத்திற்கு விஜயம் செய்கின்ற வேளையில் கேசரி நாளிதழுக்காக நேர்காணல் செய்வதற்கு முயற்சித்தோம், நெருக்கமான நிகழ்ச்சி நிரல் என்பதனால் ஒவ்வொரு வைபவத்திலும் ஐந்து, பத்து நிமிடங்களை மட்டுமே செலவழித்தனர். எனினும் அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான விஜயத்தின் போது காலை உணவையும் உட்கொண்டு இரண்டொரு மணித்தியாலம் அங்கிருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான தொரு நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பனை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவர் குறுகிய நேரத்திற்குள் கேசரி நாளிதழுக்காக வழங்கிய செவ்வியின் விபரத்தை கேள்வி பதிலாக தருகின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் சிறைக்கூடங்களில் வாழ்கின்றனர். அது திறந்தவெளி சிறைச்சாலை, முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம் என்றெல்லாம் கூறப்படுகின்றதே உங்களுடைய பார்வையில் எவ்வாறு இருக்கின்றது?

நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

முகாம்களுக்குள் செல்வதற்கு ஏதேனும் வரையறை விதிக்கப்பட்டனவா? அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மட்டுமே சந்தித்தீர்களா?

சென்றோம், மக்களின் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்து கொண்டோம். எங்களுக்கு வரையறை என்றொன்று விதிக்கப்படவில்லை, ஏன்? எங்களுக்கு வரையறை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? யாரை சந்திக்கவேண்டும். சந்திக்க கூடாது என்று வரையறுக்கப்படவில்லை, எனினும் சில வைபவங்கள் நடைபெற்றன. அதில் சகலரும் பங்குபற்றவில்லை.

நிலைமையில் திருப்தி கொள்கின்றீர்களா? அந்த மக்கள் உடனடி தேவை என்னவாக இருக்கின்றது?

மக்களுக்கு நிவாரண உதவிகளோ? ஏனைய பொருள் உதவிகளோ? தேவையில்லை, உடனடியான தேவையாக அந்த மக்களை அவர்களுடைய சொந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்படல் வேண்டும் என்பதனையே அவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தனர்.

உடனடியாக மீளக்குடியர்த்தப்படல் என்பதனை தவிரவும் அவர்கள் எம்மிடம் எவ்விதமான உதவிகளையும் கோரவில்லை. முகாம்கள் சர்வதேச அளவில் அகதிகள் தங்குவதற்கான விதிமுறைகளுக்கு ஓரளவு நெருக்கமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.எவ்வாறெனினும் குறுகிய நிலப்பரப்பிற்குள் சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளமை வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாகும்.

தமிழக எம்.பி.க்களின் தூதுக்குழுவை தமிழக அரசாங்கமோ? இந்திய அரசாங்கமோ? அனுப்பவில்லை என்றும் அவர்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே இலங்கைக்கு சென்றிருப்பதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருகின்றாரே?

தவறேதும் இல்லை. ஏனென்றால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதன் பின்னர் தமிழக எம்.பி.க்கள் முதலமைச்சரையும் சோனியா காந்தியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அழைப்பின் பிரகாரம் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், விடுதலைகள் சிறுத்தைகள் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டன. ஏனைய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அழைப்பை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. அதனால் நாம் பிரதிநிதிகளை நியமித்து புறப்பட்டோம்.

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?

அனுமதிக்கப்பட்டுள்ளவனை பார்ப்பதற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவையில்லை, பார்க்கவிரும்பினால் விசா எடுத்துக்கொண்டு வரவேண்டியதுதான்?

நோயாளியை பார்ப்பதாயின் மலையகத்திற்கு வந்ததன் நோக்கம்?

பதில்; மலையகத்திற்கு எங்களை வரவேண்டாம் என்று சொல்கின்றீர்களா? நாங்கள் வரக்கூடாதா? நிகழ்ச்சி நிரல் அப்படி அமைந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது?

அப்படியாயின் கிழக்கிற்கான விஜயம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லையா?

பதில்; நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவிருக்கின்றோமா? இல்லையா? என்பது பற்றி எமக்கு எவ்விதமான அறிவிப்புகளும் கொடுக்கவில்லை. விமானம் தாமதித்ததனால் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமக்கு கூறப்பட்டது.

நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பீர்களா?

நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கின்றதோ அதன் பிரகாரம் ஒவ்வொன்றும் நடைபெறும். ஆளும் தரப்பை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நான் அறிகின்றேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான விடயங்களை ஆழ வலியுறுத்தின?

பதில்; உங்களுக்கு தெரிந்த விடயங்களை என்னிடம் மீண்டும் கேட்கின்றீர்களே? சில விடயங்களை நாம் அறிய வேண்டியிருக்கின்றது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

விஜயம் தொடர்பில் எவ்வளவு நாட்களுக்குள் அறிக்கையிடுவீர்கள்? யாரிடம் கையளிப்பீர்கள்?

பதில்; இது காலம் தாழ்த்தும் விடயமல்ல, உடனடியாகவே அறிக்கையிடப்படும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எம்.பி.க்களின் அறிக்கையை தமிழக முதல்வர் கருணாநிதியிடமே கையளிப்போம்.

மலையகத்தை பற்றி ஏதாவது கூறவிரும்புகின்றீர்களா? .

மலையகம் அருமையாக இருக்கின்றது, மாறிவருகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாற்றிவருகின்றது என்றார்.

.

Related Posts with Thumbnails